வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

முடிஉதிர்வை தடுத்து வளர்ச்சிக்கு உதவும் குறிப்புகள்...!!

முதலில் முடிக்கு பயன்படுத்தும் தண்ணீரில் கவனம் செலுத்த வேண்டும். வெந்நீர் முடி வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. உச்சி வெயிலில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
நாம் தேர்ந்தெடுக்கும் ஷாம்பு, ரசாயனம் கலந்த ஷாம்பு, கூந்தல் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் நன்மை தராது. எனவே ரசாயனம் இல்லாத இயற்கையான முறையில் உள்ள சீக்காய், கற்றாழை, செம்பருத்தி, வெந்தயன் இவற்றை உபயோகிக்க முயற்சி செய்வது எவ்வித பக்க விளைவுகள் இல்லாமல் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
 
தலை முடியினை உலர்த்துவதற்கு ஹேர் ட்ரயிர் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. மெல்லிய துணியினை கொண்டு மெதுவாக  துவட்டவேண்டும். எக்காரணத்தை கொண்டும் மின்சாதனங்களை உபயோக்க கூடாது.
 
ஈரமான முடியை முறுக்கவோ, இறுக்கமாக கட்டவோ கூடாது. இதனால் தமைமுடி உடைந்துவிடும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
 
அதிக வெயில், அதிக தூசி இரண்டுமே தலை முடி வளர்ச்சியினை பாதிப்பவை. எனவே கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
தூக்கம் மிக மிக முக்கியம். ஆழ்ந்த தூக்கம் அளவான சத்துள்ள உணவு இவை இரண்டும் கூந்தல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. மெல்லிய பருத்தியிலான தலையணை உறை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
 
மலசிக்கல், அஜீரணம் போன்றவை ஏற்படாமல் உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள வேண்டும். ஈர தலையில் எண்ணெய் தேய்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 
இரவு நேரங்களில் எண்ணெயினை மிதமாக சூடு செய்து கூந்தலின் மயிர் கால்களில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சிறிதளவு அடி பாதங்களில் தேய்க்க ஆழ்ந்த துக்கம் வரும். இதை அனைவரும் முயற்சி செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.