வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வெற்றிலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் உண்டா...?

வெற்றிலையை பயன்படுத்தும் போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு ஆகியவற்றை நீக்கி விட்டு உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வெற்றிலைகளை வைத்து கசக்கி 5 அல்லது 6 சொட்டுக்கள் சாறு பிழிந்து கொடுக்கலாம்.
வெட்டுக்கள், சிராய்ப்புகள் போன்ற இடங்களில் வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மேல் தடவி வந்தால் சீக்கிரத்தில்  குணமாகிவிடும்.
 
சிலருக்கு சிறுநீர் போவதில் பிரச்சனை ஏற்படும். இதை குணமாக்க வெற்றிலை சாறை அவ்வப்போது பருகி வந்தால் நச்சுக்கள் நீங்கி சிறுநீர்  பெருகி சரியான கால இடைவெளியில் சிறுநீர் போக உதவும்.
வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி சாப்பிட்டு வந்தால் அணைத்து எலும்புகளும் வலுப்பெறும். மேலும் எலும்புகள் சுலபத்தில் பாதிப்படையாமலும், உடையாமலும் வலுவூட்டுகிறது.
 
வெற்றிலையுடன் பாக்கு குறைவாகவும் சுண்ணாம்பு அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசியின்மை இருப்பவர்களுக்கு நல்ல பசியை  தூண்டும்.
 
வெற்றிலையில் வீரியமிக்க நோய் எதிரிப்பு சக்தி கொண்ட சவிக்கால் என்னும் பொருள் இருப்பதால் உடல் பலவீனம், சோம்பல், மந்தம்  உணர்பவர்களுக்கு சிறந்தது.