வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (10:48 IST)

ஆயுள் கெட்டி ! விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த பிரிட்டன் இளவரசர் ...

நம் இந்தியாவை 200 ஆண்டுகள் அடிமை படுத்தி நம் இயற்கை செல்வவளங்களைக் கபளீகரம் செய்தது இங்கிலாந்து அரசு. அந்த நாட்டில் நீண்ட நெடுங்காலமாக அரசாட்சி முறை இருக்கிறது. அதாவது பிரதமர் இருந்தாலும் அரசிக்கும், இளவரசர் வாரிசுகளுக்கும் ராஜ உபசரிப்புகள் ஏராளமாக வழங்கப்படுகிறது. அதனாலேயே அவர்களுக்கு உலகெங்கும் மதிப்பும், மரியாதையும் அதிகம்.
தற்போது பிரிட்டன் இளவரசர் பிலிப்(97) என்பவர் காரில் தன் நண்பர்களுடன்  சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று விபத்து ஏற்பட்டது. அப்போது இளவரசரின் கார் குப்புறக் கவிழ்ந்தது.
 
ஆனால், இவ்விபத்தில், இளவரர் சிறிதும் காயமின்றி உயிர் தப்பினார். உடனடியாக மக்கள் இளவரசர் மற்றும் அவரது நண்பர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். 
 
மக்கள் அனைவரின் பிராத்தனையின் காரணமாகவே இளவரசர் உயிர் பிழைத்துள்ளதாக பக்கிம்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.