வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2017 (23:23 IST)

தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றி! கட்டலோனியாவை அடுத்து மேலும் பல நாடுகள் பிரியுமா?

ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரிந்து கட்டலோனியா என்ற தனிநாடு வேண்டும் என்று ஒரு பிரிவினர் நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது அதற்காக நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதால் தனிநாடு உறுதியாகியுள்ளது.

 
தனிநாடாக கட்டலோனியா பிரிவதற்கு அப்பகுதியில் உள்ள 90% ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு நாட்டில் இருந்து ஒரு மாநிலம் தனியாக பிரிவதை அனுமதிக்க முடியாது என்று ஸ்பெயின் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று இதர மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன
 
இந்த வெற்றி இதேபோல் பிரியும் பல மாநிலங்களுக்கு ஊக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை இந்தியாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.