1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

காளான் கட்லட் செய்ய வேண்டுமா...!

தேவையான பொருட்கள்
 
காளான் -  1/2 கிலோ (சிறிய துண்டுகளாக வெட்டவும்)
உருளைக்கிழங்கு - 3 சிறியது (வேக வைத்து மசிக்கவும்)
வெங்காயம் - 2 (துண்டுகளாக நறுக்கவும்)
பச்சைப் பட்டாணி - ¼ கப் (வேகவைக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (துண்டுகளாக நறுக்கவும்)
இஞ்சி - 1 துண்டு (துண்டுகளாக நறுக்கவும்)
பூண்டு - 5 பல்லு (துண்டுகளாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - ½ தேக்கரண்டி
பிரட் தூள் - 1 1/2 கப்
முட்டை - 2
சமையல் எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
 
பாத்திரத்தில் எண்ணெயை விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன் நிறமாக வரும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியைச் சேர்த்து வதக்கவும். உப்பு தேவையான அளவு போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்  தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து  சிறிது நேரம் வரை நன்றாகக் கலக்கவும். நறுக்கிய காளான்கள், பச்சை பட்டாணி,  கறிவேப்பிலையை சேர்க்கவும். ஒரு பாத்திரத்தை எடுத்து மசித்த உருளைக் கிழங்கைப் போடவும்.
 
செய்து வைத்த மசாலாவை இந்தப் பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும். பின் நறுக்கிய கொத்தமல்லி இலையைச்  சேர்க்கவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடிக்கவும். பிரட் தூள் தட்டில் போட்டு வைத்துக் கொள்ளவும்.  மசாலாவை சிறிய பந்துகள் போல் பிடித்து, தட்டி, அதை முட்டையில் முக்கி எடுத்து பிரட் தூளில் பிரட்டி பின் தடாவில்  எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் போட்டு இருபுறமும் சிவக்க்கும்வரை பொருத்திருந்து எடுக்கவும். சுவையான காளான்  கட்லட் தயார்.