1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (14:54 IST)

மீண்டும் இணையும் சிம்பு சுசீந்தரன் கூட்டணி? நேற்று நடந்த சந்திப்பு!

நடிகர் சிம்பு சுசீந்தரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ஈஸவரன் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே கட்டமாக முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது.

சிம்புவின் சினிமா வாழ்க்கையிலேயே மற்ற எந்த படத்துக்கும் இல்லாத சிறப்பு ஈஸவரன் படத்துக்கு உண்டு. அது என்னவென்றால் இந்த படத்தை மொத்தம் 26 நாட்களிலேயே எடுத்து முடித்துள்ளார் சுசீந்தரன். இயக்குனரின் இந்த வேகமான அனுகுமுறை சுசீந்தரனுக்கு ரொம்பவே பிடித்துப் போக ஈஸ்வரன் ரிலிஸுக்கு முன்னதாகவே மீண்டும் அவர் இயக்கத்தில் ஆசைப்பட்டுள்ளாராம் சிம்பு. இதற்காக சுசீந்தரனிடம் கதைக் கேட்க அவர் நேற்று இரவு சிம்புவை சந்தித்து கதையை சொல்லியுள்ளாராம்.