1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (17:21 IST)

தியேட்டர் பிடிப்பதில் மும்முரமாக இருக்கும் ஈஸ்வரன் தயாரிப்பாளர்!

ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளர் பொங்லுக்கு படத்தை ரிலிஸ் செய்ய திரையரங்குகளை கைப்பற்றி வருகிறாராம்.

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ஈஸவரன் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே கட்டமாக முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சுசீந்தர்ன் 26 நாட்களில் படமாக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தை மாஸ்டர் படத்துக்கு எதிராக ரிலிஸ் செய்வதால் தியேட்டர்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இன்று வரை மாஸ்டர் படத்தின் ரிலீஸ் உறுதியாகாததால் ஈஸ்வரன் படக்குழு இப்போது திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் மும்முரமாக உள்ளதாம். இதுவரை 450 தியேட்டர்கள் வரை கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.