1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2018 (16:09 IST)

‘சங்கமித்ரா’ படம் ட்ராப் ஆகவில்லை என சுந்தர்.சி அறிவிப்பு

‘சங்கமித்ரா’ படம் ட்ராப் ஆகவில்லை என இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகலப்பு 2’. ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, நிக்கி  கல்ரானி, கேத்ரின் தெரேசா நடித்துள்ள இந்தப் படம், பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சுந்தர்.சி  அறிவித்துள்ளார். “கலகலப்பு 2 மாதிரியான படங்களுக்கு கதை ரெடியானால் போதும், ஷூட்டிங்  போய்விடலாம். ஆனால், ‘சங்கமித்ரா’ படத்துக்காக நிறைய ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் செய்ய  வேண்டியிருக்கிறது. அதனால்தான் தொடங்க தாமதமாகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படம்  தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.