1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (13:47 IST)

திருமணத்தில் ரன்வீரின் உடைகளை கிழித்து எறிந்த உறவினர்கள்

பாலிவுட்  நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் நேற்று கோலாகலமாக நடந்தது.
 
இதில் மிக நெருங்கிய  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். 
 
இந்த  திருமண விழாவில் பங்கேற்க மீடியாக்களுக்கு  அனுமதி அளிக்கப்படவில்லை. 
 
இந்நிலையில் தற்போது வந்துள்ள ஒரு புகைப்படத்தில் ரன்வீரின் உடைகளை உறவினர்கள் கிழித்துள்ளது போல உள்ளது.
 
சிந்தி திருமண முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது. அதில் மணமகனின் உடைகளை உறவினர்கள் கிழிப்பது வழக்கமாம்.