1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (10:25 IST)

தனுஷ் தாடியை எடுத்தது எதற்காக தெரியுமா?

கெளதம் மேனன் படத்தில் நடிக்கத்தான் தனுஷ் தாடியை எடுத்துள்ளார் என்கிறார்கள்.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தர்புகா சிவா இசையமைக்கும் இந்தப்  படத்தில், மேகா ஆகாஷ் ஹீரோயின். இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போதே, பாதியில் விட்டுவிட்டு விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தைத் தொடங்கினார் கெளதம் மேனன்.
 
‘துருவ நட்சத்திரம்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மறுபடியும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வைக் கையில் எடுக்கிறார். நமக்கு கிடைத்த தகவல்படி, ஓஎம்ஆரில் இன்று ஷூட்டிங் தொடங்குகிறது. இன்னும் சில காட்சிகளே எடுக்கப்பட வேண்டி இருப்பதால், ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார் கெளதம் மேனன்.
 
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தில் தாதாவாக நடித்துவரும் தனுஷ், அந்தப் படத்துக்காக பெரிய தாடி, மீசை  வைத்திருந்தார். ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட அப்படித்தான் கலந்து கொண்டார். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தாடி - மீசையை வழித்துவிட்டு  சின்னப்பையன் போல காட்சியளித்தார். அது, கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் கெட்டப்!