1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 18 மே 2018 (16:55 IST)

போட்டி போடும் அணிகள்: ப்ளே ஆப் சுற்றுக்குள் யார் யார்?

ஐபிஎல் போட்டியின் ப்ளே ஆப் சுற்றுக்கு 8 அணிகளில் இருந்து 4 அணிகள் மட்டுமே தேர்வாகும். ப்ளே ஆப் சுற்றுக்கு இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் ஆகிய 2 அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன.
 
அடுத்த இரண்டு இடங்களுக்கு எந்த அணி முன்னேறும் என்பது தற்போதைய கேள்வியக உள்ளது. அடுத்த இரண்டு இடத்திற்காக ஐந்து அணிகள் மோதுகின்றன. 
 
ஏற்கனவே டெல்லி அணி ஐபிஎல் போட்டியை விட்டு வெளியேறி விட்டது. கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த 5 அணிகளுக்கும் தலா ஒரு போட்டியே மீதம் உள்ளது. 
 
# கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 13 ஆட்டத்தில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று இருக்கிறது. ஆனால், கொல்கத்தாவின் ரன் ரேட் மோசமாக உள்ளது.
 
# மும்பை இந்தியன்ஸ் 13 ஆட்டத்தில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் உள்ளது. மும்மை அணியின் ரன் ரேட் சிறப்பாக உள்ளது. 
 
# பெங்களூர் அணியும் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் உள்ளது. பெங்களூர் அணியின் ரன்ரேட் நல்ல நிலையில் இருப்பது அணிக்கு சாதகமான ஒன்று.
 
# ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் உள்ளது. அனால், ரன்ரேட் மோசமாக இருப்பதால் மிகப்பெரிய வெற்றி பெறுவது அவசியம்.
 
# கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 13 ஆட்டத்தில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. ரன் ரேட் சொதப்பலாக உள்ளதால், மிகப்பெரிய வெற்றி அந்த அணிக்கு அவசியமாகிறது.