வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 28 அக்டோபர் 2017 (21:13 IST)

புரோ கபடி: 3வது முறையாக சாம்பியன் ஆனது பாட்னா அணி

கடந்த சில மாதங்களாக புரோ கபடி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று கிளைமாக்ஸாக இறுதி போட்டி நடைபெற்றது.



 
 
இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற குஜராத் மற்றும் பாட்னா அணிகள் இந்த போட்டியில் மோதின. இரு அணிகளும் சாம்பியன் பட்டம் பெற ஆக்ரோஷமாக விளையாடிய போதிலும் ஒரு கட்டத்திற்கு மேல் பாட்னா அணியின் வெற்றி உறுதியானது.
 
இறுதியில் பாட்னா அணி 55-38 என்ற புள்ளிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே இருமுறை பாட்னா அணி புரோ கபடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.