வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (16:21 IST)

பாண்டியாவை கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்...

இந்திய அணியில் ஆல் ரவுண்டராக கருதப்படும் ஹர்திக் பாண்டியாவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் மூலம் கிழித்து தொங்கவிட்டுள்ளனர். இதற்கான காரணத்தை காண்போம்...
 
இந்திய அணி தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் சொதப்பிய இந்திய அணி, ஒரு நாள் போட்டியில் சுதாரித்துக்கொண்டது. ஆனாலும், 4 வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது. 
 
இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 போட்டியில் விளையாடிய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வெறும் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். பவுலிங்கிலும் சரியாக செயல்படவில்லை. 
 
நடந்து முடிந்த 4 போட்டியில் மொத்தமாக 25 ஓவர்கள் வீசியுள்ள பாண்டியா, 147 ரன்கள் கொடுத்து வெறும் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். 
 
இதில் மிகவும் கடுமையாக இவரா அடுத்த கபிள் தேவ் என்றும், இப்படியே சென்றால் இந்திய அணியில் அவரின் இடம் கேள்வி குறியாகிவிடும் என்றும் விமர்சித்துள்ளனர்.