1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (12:51 IST)

இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளருக்கு கொரோனா அறிகுறி… வீட்டுக்குள்ளேயே தனிமை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால் அவர் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் புவனேஷ்வர் குமார். கடந்த மாதம் இவரின் தந்தை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் அவரின் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இப்போது மீரட்டில் உள்ள தனது வீட்டில் தானும் மனைவியும் கொரோனா அறிகுறிகள் தென்படுவதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.