ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (18:02 IST)

மீனவர்களை மீட்கக்கோரி சென்னையில் போஸ்டர் ஓட்டிய 2 பேர் கைது

ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் போஸ்டர் ஓட்டிய புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில் மீனவர்களை மீட்டுத்தரக்கோரி அவர்களது உறவினர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து குழித்துறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  சென்னையில் ஆங்காங்கே பரவலாக மீனவர்களை மீடகக் கோரி, மீட்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 
 
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பினர் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்த இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.