1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 டிசம்பர் 2017 (15:38 IST)

சென்னை சவீதா பல்கலைகழகத்தில் 2 வது நாளாக தொடரும் போராட்டம்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சவீதா பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து, அக்கல்லூரியில் பயின்று வரும் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சவீதா பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயிலும் மாணவ மாணவிகள், கல்லூரி நிர்வாகம் கட்டுப்பாடு என்ற பெயரில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுவதாக கூறி நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சவீதா கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் 2 ஆம் நாளான இன்றும் வளாகத்தில் திரண்ட மாணவ மாணவிகள்  போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக கல்லூரி வளாகத்திற்குள் 50-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.