வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (15:28 IST)

குமரி மீனவர்களை மீட்டு தரக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் மக்கள் போரட்டம்

ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் இன்றுவரை வீடு திரும்பாததால், மீனவர்களை மீட்டு தரக்கோரியும், நிவாரணத் தொகை வழங்க கோரியும் அவர்களது குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். 
குமரி மாவட்டத்தை கடந்த 30-ந்தேதி ஓகி புயல் புரட்டி போட்டது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தன. வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. குமரி மாவட்டம் இருளில் மூழ்கியதால் மக்கள் தவித்தனர். கடந்த ஒரு வாரமாக உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். 

கடலுக்கு மின்பிடிக்க சென்ற மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கினர். இவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களை சிலர் இன்னும் வீடு திரும்பாத நிலையில் அவர்களை மீட்டுத் தரக்கோரி அவர்களது குடும்பத்தினர் மற்றும் பகுதிவாசிகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 
 
10 நாட்கள் ஆகியும் கடலுக்குச் சென்றவர்கள் மீனவர்கள் பலர் வீடு திரும்பவில்லை என்றும் அவர்களை மீட்டுத் தரக் கோரியும்,  அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென்றும் இன்று காலை முதல் குளச்சலைச் சுற்றியுள்ள 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் குமரி மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரியும் சென்னை சேப்பாக்கத்தில்  மக்கள் போரட்டம் நடத்தி வருகிறார்கள்.