வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2018 (13:32 IST)

இவ்வளவு நாள் நான் சத்ரியன்...இனிமேல் சாணக்கியன் : டி.ராஜேந்தர் அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலமின்மை ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் பலருக்கு முதல்வர் கனவு வந்து, கட்சி ஆரம்பித்து வருகின்றனர்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால், விஜய், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் அரசியல் களத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே அரசியலில் அவ்வப்போது தலைகாட்டி வரும் டி.ராஜேந்தரும் தற்போது மீண்டும் முழுவீச்சில் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளாராம்.

வரும் 28ஆம் தேதி தனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை அறிவிக்கவுள்ளதாகவும், இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த தன்னை இனிமேல் அனைவரும் சாணாக்கியனாக பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். வரும் 28ஆம் தேதி அப்படி என்னதான் அறிவிக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்