1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (08:03 IST)

தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: மொத்த எண்ணிக்கை 11ஆக உயர்ந்தது

தமிழகத்தில் கொரோனாவால் 50க்கும் மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டும் ,தினமும் ஒரிரிவர் பலியாகியும் வரும் நிலையில் நேற்று 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்ததாகவும் தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்
 
மேலும் நேற்று ஒருவர் கொரோனாவால் பலியானதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக இருந்தது. இந்த நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிர் இழந்ததால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது
 
சென்னை சென்னையில் இயங்கி வரும் தனியார் விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அவருக்கு சமீபத்தில் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. தனியார் விமான நிறுவனம் ஒன்றில் பொறியியல் பிரிவில் கடந்த 2006 முதல் இவர் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் இவர்கள் வயது 50 என்றும் தெரியவந்துள்ளது