1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 11 ஏப்ரல் 2020 (20:12 IST)

மு.க. ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் பதில் அறிக்கை !

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நிலவுகிறது. எனவே, மக்களுக்கு அரசு, நிவாரணத் தொகையாக ரூ.1000 கொடுத்தளித்தது.

இதுகுறித்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டார் புகார் எழுப்பியிருந்தார்.

 மேலும் இதுகுறித்து அவர், கோவிட்-19 தொற்று தமிழ்நாட்டில் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ள அவசரநிலை ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாநில அரசை திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் புகாருக்குப் பதில் அறிக்கை அளித்துள்ளார். அதில்., மற்ற மாநிலங்களுக்கு முன்பே கொரோனா தடுப்பு நவடிக்கைகளில்  தமிழக அரசு ஈடுபட்டது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசிதழில் ஒளிவுமறைவின்றி வெளியிடப்பட்டுள்ளதாகவும், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.