வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (16:07 IST)

இந்திய பிரதமர் நரேந்திரமோடியா? நரசிம்மராவா? திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் பரபரப்பு

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகுவது நடந்து வரும் நிலையில் நரசிம்மராவ் தான் பிரதமர் என்ற வகையில் பேசிய ஒரு பேச்சு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது;
 
மக்களவை எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது, 'தம்பிதுரை சுறுசுறுப்பானவர், மின்னல் வேகத்தில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பார், புதுக்கோட்டையில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு அதன்பின்னர் ஒருசில மணி நேரங்களில் நரசிம்மராவ் அருகே உட்கார்ந்திருப்பார் என்று கூறினார். 
 
நரேந்திரமோடியுடன் தம்பிதுரை உட்கார்ந்திருப்பார் என்பதற்கு பதிலாக நரசிம்மராவுடன் உட்கார்ந்திருப்பார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது தற்போது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
 
ஏற்கனவே 'ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது' என்றும் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.