1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2017 (17:49 IST)

அவதிப்பட்ட மக்கள் – அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர் (வீடியோ)

தொடர்மழையினால் பக்தர்கள் அவதி கோரிக்கையை உடனே நிறைவேற்றி கரூர் கலெக்டர் கோவிந்தராஜ் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.


 
கரூர் கல்யாண பசுபதிஸ்வரர் ஆலயம் முன் மழை காலங்களில் சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால்  பொதுமக்கள் மற்றும் பக்தர்களுகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
 
இதை அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ்  அந்த பகுதிற்கு நேரிடையாக ஆய்வு செய்து  தண்ணீரை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். 
 
உடனடியாக நகராட்சி நிர்வாகம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.  உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் பாரட்டினர்.

- சி.ஆனந்தகுமார்