செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (19:59 IST)

13 பேரை கொன்ற படையப்பா யானை.. சாலையை மறித்து ரகளை...மக்கள் பீதி !

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள மலைப்பாதையில் ஒரு யானை ஒன்று குறிக்கிட்டு மக்களையும், வாகனஓட்டிகளையும் அச்சுறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமீபகாலமாக மூணாறில் உள்ள கன்னிமலி என்ற பகுதியில் ஒன்றை யானை ஆன படையாப்பா திரிந்து வருவதாக மக்கள் தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில், இன்று, செவ்வாய் கிழமை மூணாறில் இருந்து மறையூர் செல்லு பாதையில் ஒன்மேன் ஆர்மி போல படையப்பா யானை வாகங்களுக்கு வழிவிடாமல் நின்றிருந்தது.
 
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் வந்து முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் படையப்பா கடுப்பாக நின்றுகொண்டிருந்தது. பின்னர், சிறிது நேரம் கழித்துத் தானாகவே அங்கிருந்து கலைந்து சென்றது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்தப் படையப்பா யானை இதுவரை 13 பேரை தாக்கி கொன்றுளதா; மக்கள் பெருதும் அச்சத்தில் உள்ளன்னர்.