வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 9 ஏப்ரல் 2018 (08:47 IST)

காவிரி விவகாரம்; தமிழக, மத்திய அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ அமைப்பினர், விவாசாயிகள் என அனைத்து தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்  காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தமிழக, மத்திய அரசுகளின் மனு மீதான விசாரணை ஏப்ரல் 9-ந் தேதி நடைபெறும் என தெரிவித்திருந்தது. 
 
அதன்படி 9-ந் தேதியான இன்று காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக, மத்திய அரசுகளின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.