ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (19:29 IST)

விபச்சார தொழிலுக்கு உதவிய ஏட்டு : அதிரவைக்கும் தகவல்

சில நாட்களுக்கு முன்பு நடந்த விபச்சார பெண்ணுக்கு உதவியதாக ஏட்டு பார்த்திபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல தகவல்கள் வெளிவருகின்றனர்.
அதில் முக்கியமாக ஜெயந்தி என்பவர் விபச்சாரம் செய்வதற்கு வீடு எடுத்துக்கொடுத்து  வருமானம் பார்த்துள்ளார் ஏட்டு பார்த்திபன்.
 
மேலும் ஜெயந்தியின் பரிதாப நிலையை கணக்கில் கொண்டுதான் பார்த்திபன் அவருக்கு உதவி செய்திருக்கிறார்.
 
இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னெவென்றால் ஜெயந்தி பாலியல் தொழில் கிராக்கி செய்ய.. ஏட்டு பார்த்திபனும் சிலரை மிரட்டி பணம் வசூழ் செய்து சென்னையில் ஒய்யாரமாக செலவழித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
 
சமீபத்தில் விஸ்வநாதன் என்பவர் ஜெயந்தியுடன் உல்லாசம் இருந்துவிட்டு பேரம் பேசிய தொகையை கொடுத்தார். ஆனால் விஸ்வநாதனிடம் அதிக பணம் இருப்பதை பார்த்த ஜெயந்தி அவருடன் தகராறு செய்து இன்னும் அதிக தொகை கேட்டுவிட்டு  உடனே ஏட்டுக்கு போன் செய்ய .. உடனே விரைந்து வந்த ஏட்டு விஸ்வநாதனை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார்.
 
இந்த சம்பவத்துக்குப் பிறகு விஸ்வநாதன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த பிறகுதான் விபச்சார தொழில் செய்யும் ஜெயந்திக்கு வீடு பார்ப்பதிலிருந்து சகல உதவிகளையும் செய்து  கொடுத்து ஏட்டு  தனியாய் கவனித்து வந்திருக்கிறார் என்ற  விஷயம் பரவலாகி உள்ளது.

ஜெயந்தியை போலிஸார் கைது செய்துள்ளனர்.இப்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் ஏட்டு பார்த்திபன் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் தெரிவிகின்றன.
 
குற்றத்தை தடுக்கும் போலீஸாரே குற்றத்திற்கு துணைபோன சம்பவம் போலிசம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மற்றும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.