வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்ய...!!

ஆட்டுக்கறி - 500 கிராம்
பாஸ்மதி அரிசி - 500 கிராம்
பட்டை - 4 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 2 துண்டு
இஞ்சி, பூண்டு அரைத்தது - 3 தேக்கரண்டி
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 6
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1 கப்
புதினா இலை - 4 மேஜைக்கரண்டி
தக்காளி - 1
வெங்காயம் - 2
தேங்காய்ப்பால் - 1 கப்
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
ஆயில் - 50 மி.லி.
நெய் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை:
 
மட்டனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, குழையாமல் வேகவைத்துக் கொள்ளவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
 
தக்காளியை 6 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,  பிரியாணி இலை போட்டு வதக்கவும்.
 
அதன்பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு வதங்கியதும் கொத்தமல்லி இலை, புதினா, மிளகாய்த்தூள் தக்காளி போட்டு வதக்கவும். தேங்காய்ப்பால், தன்ணீர் ஊற்றி உப்பு, மீதமுள்ள மஞ்சள் தூள் போட்டுக் கிளறவும்.
 
கொதித்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி விடவும். குக்கரை மூடி, வெயிட் போடவும். 2 விசில் குக்கரை இறக்கி வைக்கவும். வெயிட் எடுத்த பின் குக்கரைத் திறந்து நெய் ஊற்றி மெதுவாகக் கிளறி, மூடி வைக்கவும். சூடாகப் பரிமாறவும்.