1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2017 (11:42 IST)

இளம்பெண்ணை நிர்வாண புகைப்படம் எடுத்த வாலிபர் - வாட்ஸ்-அப்பில் அதிர்ச்சி

போதை மருந்து கொடுத்து இளம்பெண்ணை நிர்வாண புகைப்படம் எடுத்த வாலிபர் அதை வாட்ஸ்-ஆப்பில் பகிர்ந்த விவகாரம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மும்பை மலாடு பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண் ஒரு வாலிபருடன், நெருக்கமாக இருக்கும் நிர்வாணப் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இதைக்கண்ட அந்த இளம்பெண்ணும், அப்பெண்ணின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். 
 
அந்த புகைப்படத்தில் தன்னுடன் இருப்பது தன்னுடைய ஆண் நண்பர் ஹிமான்ஸ் ராத்தோடு(23) என்பது அப்பெண்ணிற்கு தெரிந்தது. ஆனால், அவர் எப்போது இப்படி புகைப்படம் எடுத்தார் என்பது அப்பெண்ணிற்கே தெரியவில்லை. இதனையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். 
 
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் உண்மைகள் வெளிவந்தன. அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பெண்ணை, ஹிமான்ஸ் ராத்தோடு ஒரு பார்லருக்கு அழைத்து சென்றனர். அங்கு ஹிமான்ஸின் நண்பர்கள் இருவரும் இருந்தனர். அப்போது, அப்பெண்ணிர்கு ஹூக்கா எனும் போதை புகைக்கக் கொடுத்தனர். இதில், அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
 
இதையடுத்து, அப்பெண்ணை நண்பரின் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அப்பெண் அயர்ந்து தூங்கிவிட்டார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அப்பெண்ணின் ஆடைகளை களைந்து, அவருடன் தானும் நெருக்கமாக இருப்பது போல் செல்போனில் புகைப்படம் எடுத்தார். அதன் பின் அதை தன் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் மூலம் ஒரு அது சிலருக்கு அனுப்பப்பட்டு, கடைசியில் அந்த பெண்ணிற்கும் அது வாட்ஸ்-அப்பில் அனுப்பப்பட்டது தெரியவந்தது.
 
இதையடுத்து, ஹிமான்ஸ் உட்பட அவரின் நண்பர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.