1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (18:05 IST)

முதல் திருநங்கை அழகிப் போட்டியில் பட்டம் வென்றவருக்கு குவியும் வாழ்த்துக்கள்...

தொழில் முன்னேற்ற பெரு நகரமான மும்பையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வீனா சென்றே என்பவர் முதல் அழகி பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
 
இவர் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற திருநங்கை போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது பற்றி அவர் கூறும் போது:
 
5 ஆம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டேன்.இருந்தாலும் மற்றவர்களிடமிருந்து நான் தனித்தே இருந்தேன்.ஆனாலும் என்னாலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு என்னிடம் இருந்தது.இன்று நான் சாதித்து விட்டேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
தற்போது திருநங்கைளில் பலர் போலீஸாகவும்,வழக்கறிஞர்களாகவும்,பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.