வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (09:28 IST)

சொத்துக்காக 90 வயது பாட்டியை அடித்து துன்புறுத்திய பேத்தி கைது

கேரளாவில் 90 வயது பாட்டியை சொத்துக்காக அடித்து துன்புறுத்திய பேத்தியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கல்யாணி(90). இவரது பேத்தி தீபா(40). கல்யாணியும் தீபாவும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். தீபா தனது பாட்டியான கல்யாணியை சொத்துக்காக தினமும் கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். பேத்தி தீபா தினமும் தன்னை அடிப்பதாகவும், அதனால், உடம்பு முழுக்க காயங்கள் உள்ளதாகவும் கல்யாணி அழுதபடி பக்கத்து வீட்டாரிடம் கூறியுள்ளார்.
 
 
இதனையடுத்து தீபாவின் பக்கத்து வீட்டுக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சொத்துக்களை அபகரிப்பதற்காக பாட்டியை அடித்து துன்புறுத்தியதாக தீபா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.