தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவோடு கூட்டு சேரும் மலேரியா, டெங்கு! – மழை சீசனால் அபாயம்!
- முன்கூட்டியே சிலை செய்ய ஆர்டர்! – மரணத்தை கணித்தாரா எஸ்பிபி?
- குண்டுராவுக்கு கொரோனா: கவலையில்லாமல் சுற்றி திரியும் ஸ்டாலின்!
- நாங்களும் விவசாயிகளின் நலம் விரும்பிதான்! – பச்சை துண்டுடன் வயலில் இறங்கிய ஸ்டாலின்
- தமிழ் சினிமாவில் 800 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ள நிறுவனம்… எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் படம்!
வெற்றி யாருக்கு? ரன் மெஷினுக்கா? ஹிட் மேனுக்கா? – வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள்!
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஆண்டின் ஐபிஎல் சீசனில் 10வதாக நடைபெறும் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. இரண்டு அணிகளுக்குமே இது இந்த சீசனின் மூன்றாவது போட்டி.
முன்னதாக நடந்த இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியடைந்துள்ளன. இந்த இரு போட்டிகளில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 195 ரன்கள் சேஸ் செய்துள்ளது. ஆர்சிபி அதிகபட்சமாக 163 வரை சேஸ் செய்துள்ளனர். ஏற்கனவே சில ஆண்டுகள் முன்பாக இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து கோலி – ரோகித் ஷர்மா இடையே போட்டி இருந்ததாக பேசப்பட்டு வந்தது.
இதனால் இந்த இருவர் தலைமையில் அணிகள் மோதிக்கொள்ளும் இந்த போட்டியை இருவருக்கும் இடையேயான போட்டியாகவே ரசிகர்கள் பாவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்