செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2017 (09:48 IST)

அஜித் நல்ல நடிகர்: ஹேமா ருக்மணி ஐஸ் வைப்பது ஏன்?

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல் படத்தை பிரமாண்டமாக தயாரித்த தேனாண்டாள் நிறுவனம், அடுத்ததாக சங்கமித்ரா மற்றும் எஸ்.ஜே.சூர்யா படங்களை தயாரித்து வருகிறது. மேலும் கார்த்திக் சுப்புராஜ்-தனுஷ் இணையும் படத்தையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி, 'அஜித் ஒரு நல்ல நடிகர் என்றும், அவருடைய நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும் என்றும் கூறினார். மேலும் அஜித் விரும்பினால் அவர் நடிக்கும் படத்தையும் தங்கள் நிறுவனம் தயாரிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

'மெர்சல்' திரைப்படம் நல்ல வசூலை பெற்ற போதிலும், படத்தின் பட்ஜெட் எகிறிய காரணத்தால் எதிர்பாத்த லாபம் தேனாண்டாள் நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை என்றும் அதன் காரணமாகவே அஜித் படத்தை தயாரிக்க அந்நிறுவனம் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள 'விசுவாசம்' படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.