1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 12 மே 2017 (11:18 IST)

அடம்பிடித்த தனுஷ்; மறுத்த இயக்குனர் பா.ரஞ்சித்!

இயக்குனர் பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இப்படத்தை ரஜினியின் மருமுகனும்,  நடிகருமான தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்து, அதற்கான முதற்கட்ட பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
தனுஷ், இசையமைப்பாளர் அனிருதை பிரிந்த பிறகு இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு ஆதரவு அளித்து வருவதுடன்  தனது படங்களில் வாய்ப்பும் அளிக்கிறார். கபாலி படத்தை போன்றே தனது இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஆக்க விரும்பியுள்ளார் ரஞ்சித். தனுஷோ தனக்கு பிடித்த ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக்க  வேண்டும் என்று ரஞ்சித்திடம் கூறியுள்ளார்.
 
எனக்கு சந்தோஷ் தான் சரிப்பட்டு வருவார், என்று தனுஷிடம் பேசி அவரை சமாதானப்படுத்தி சந்தோஷையே ஒப்பந்தம்  செய்துள்ளாராம். மாமா ரஜினியின் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார் தனுஷ். என் கதைப்படி அது  சரிவராது. உங்களுக்காக நான் கதையை மாற்ற மாட்டேன் என்று ரஞ்சித் தன் முடிவை சொல்லிவிட்டாராம்.