அதன்படி அவரும் இந்த மஹாலக்ஷ்மி கோயிலை கட்டி அந்த சிலைகளை வைத்து வழிபாடு செய்தார். அதன்பிறகுதான் கடல் அலைகளின் சீற்றம் குறைந்து ப்ரீச் கான்டி சாலை அமைக்கப்பட்டது என்கிறது வரலாறு.
கோயிலில் மஹாலக்ஷ்மி, மஹாகாளி, மஹாசரஸ்வதியின் படங்களும் நிறைந்துள்ளன. மூன்று திருவுருவங்களும் ஒன்று போல மூக்குத்தி, தங்க வளையல்கள், முத்து கழுத்தணிகள் அணிந்து தோற்றமளிக்கின்றன. இந்த திருவுருவப் படங்கள் அந்த கோயிலின் ஆன்மீகத் தன்மையைக் கூட்டும் வகையில் உள்ளன.
இந்த கோயிலுக்கு உண்மையான பக்தியுடன் வரும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறுகிறது என்று நம்பப்படுகிறது.
கோயிலில் எப்போதும் கடவுளை தரிசிக்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதைக் காண முடிகிறது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மஹாலக்ஷ்மியிடம் தங்களது கோரிக்கைகளைச் சொல்லி கடவுளின் ஆசி பெற்று திரும்புகின்றனர்.
எப்படிச் செல்வது :
இந்தியாவின் வணிக நகரமான மும்பை அனைத்து நகரங்களில் இருந்தும் சாலை, ரயில், விமான மார்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து உள்ளூர் பேருந்து மூலமாக மஹாலக்ஷ்மி கோயிலை எளிதாக அடையலாம்.
மும்பை ரயில் நிலையத்தில் இருந்தோ அல்லது பேருந்து நிறுத்தத்தில் இருந்தோ, விமான நிலையத்தில் இருந்தோ வாடகை வாகனம் மூலமாக மஹாலக்ஷ்மி கோயிலுக்குச் செல்லாம். |