அந்த நேரத்தில்தான் பத்மாவதி தாயாருக்கு தற்பொழுதுள்ள இந்தக் கோயில் கட்டப்பட்டது.
புராணத்தின்படி அலமேல் மங்காபுரத்தில் உள்ள இக்கோயிலின் திருக்குளத்தில் உள்ள தாமரையில்தான் பத்மாவதி தாயார் அவதரித்ததாகக் கூறப்படுகிறது.
இத்திருக்கோயிலில் பல கடவுள்களின் சன்னதிகள் உள்ளன. பத்மாவதி தாயார், திருமலை வெங்கடாச்சலபதியின் துணைவியார் என்றே வழங்கப்படுகிறார்.
பத்மாசனத்தில் தனது கைகளில் தாமரை ஏந்தி இருக்கும் பத்மாவதி தாயாரின் திருவுருவம் வணங்குவோரிடையே பக்திப் பெருக்கை ஏற்படுத்துவதாகவும் இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர், பலராமர், சுந்தரராஜ சுவாமி, சூரிய நாராயண சுவாமி ஆகியோரின் விக்ரகங்களும் மிக ஆழகானவை.
இத்திருக்கோயிலுக்கு இணையான சிறப்பைப் பெற்றுள்ளது இங்கு வளர்க்கப்படும் யானை. இந்த யானைதான் பத்மாவதித் தாயாரின் வாகனம். இத்திருக்கோயில் விழாக்களின் போது யானை உருவம் பொறிக்கப்பட்ட கொடியே ஏற்றப்படுகிறது.
ஆன்மீக பூமியான இந்தியாவில் உள்ள ஏராளமான திருத்தலங்களில் முக்கியமானவற்றில் ஒன்று இந்த அலமேல் மங்காபுரம்.
எப்படிச் செல்வது :
ரயில் மார்கமாக : இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் ரயில் மார்கமாக திருப்பதி வர முடியும். திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் திருச்சானூர் உள்ளது.
சாலை மார்கமாக : இத்திருத்தலம் சென்னையில் இருந்து 165 கி.மீ. தொலைவில் உள்ளது.
விமானம் மார்கமாக : சென்னை, பெங்களூர், ஹைதராபாத் இடங்களில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை உள்ளது.
|