ஷிர்டி சாய் பாபாவின் கோயில் ஷிர்டி கிராமத்தில் 200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயிலிற்கு ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் சராசரியாக 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். விழாக்காலங்களில் ஒவ்வொரு நாளும் சாய் பாபாவின் தரிசனத்தைப் பெற 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகின்றனர்.
1998-99 ஆம் ஆண்டுகளில் புனருத்தாரணம் செய்யப்பட்ட சாய் பாபா கோயிலில் இப்போது அவரை தரிசிப்பதற்கு என்று தனிப்பாதை, பக்தர்களுக்கு உணவளிக்க சாப்பாட்டுக் கூடம், நன்கொடை அளிக்கவும், பிரசாதம் வழங்கவும், ரயில் பயணச் சீட்டை முன் பதிவு செய்யவும், பாபாவின் அருளாசிகளை விளக்கும் புத்தகங்கள் விற்கும் கடையும், சிற்றுண்டி சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவை யாவற்றையும் சாய் பாபா சன்ஸ்தான் செய்து வருகிறது.
ஷிர்டிக்குச் செல்வது எப்படி?
சாலை மார்க்கமாக : மும்பையில் இருந்து 161 கி.மீ., புனேயில் இருந்து 100 கி.மீ., ஹைதராபாத்தில் இருந்து 360 கி.மீ., மான்மாடில் இருந்து 29 கி.மீ., ஒளரங்காபாத்தில் இருந்து 66 கி.மீ., போபாலில் இருந்து 277 கி.மீ., பரோடாவில் இருந்து 202 கி.மீ. தூரத்தில் உள்ள ஷிர்டிக்கு எல்லா நாட்களிலும் பேருந்து வசதி உண்டு.
ரயில் மார்க்கமாகச் செல்வோர், ஷிர்டிக்கு அருகில் உள்ள மான்மாட் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்ல வேண்டும்.
விமானம் மார்க்கமாகச் செல்வோர் மும்பை அல்லது புனேயில் இறங்கிச் செல்ல வேண்டும்.
|