ஆண் மகனின் ஜாதகத்தை வைத்துத்தான் பெற்றவர்களின் இறப்பை கணிக்க முடியும் என்பது மிகவும் தவறு. ஜாதகத்தைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற எந்த வேறுபாடும் இல்லை.
ஆண் குழந்தையாக இருந்தால்தான் அது பாதிக்கும், பெண் குழந்தையாக இருந்தால் பாதிக்காது என்பதெல்லாம் தவறு.
ஒரு மனிதனின் விந்துவில் இருந்து வரும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதாவது தலைப்பிள்ளை யாராக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இலங்கையில் எல்லாம் கடைப்பிள்ளையின் ஜாதகத்தை வைத்துப் பார்ப்பார்கள். நம்மூரிலும் சில இடங்களில் தாய்க்கு தலைப்பிள்ளை, தந்தைக்கு கடைப்பிள்ளை என்று சொல்வார்கள்.
எனவே தாய்க்கு எப்படி இருக்கும் என்பதை முதல் பிள்ளையின் ஜாதகத்தில் பார்க்க வேண்டும். தந்தைக்கு கடைப்பிள்ளையின் ஜாதகத்தில் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.
அதனால் பெண் குழந்தையாக இருந்தாலும் அவர்களது ஜாதகத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பார்க்க வேண்டும்.
|