முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > கே‌ள்‌வி-ப‌தி‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம், அதாவது ரிஷப ராசிக்கு எட்டாம் ராசி தனுசு ராசி. தனுசு ராசியில் மூலம், உத்திராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய 3 நட்சத்திரங்களும் இருக்கும்.

அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு மாதமும் வரும். அந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் மன உளைச்சல், கோபம் போன்றவை அதிகம் ஏற்படும்.

சந்திரன்தான் எல்லாவற்றிற்கும் உரியவன். மனசுக்கு உரியவன். செயல்பாடுகளை கட்டுப்படுத்துபவன். எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும்.

அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.

ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லச்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.
மேலும்
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறதே?
பொய் சொல்வதற்கு தூண்டுவது எது?
வா‌ழ்‌க்கை‌த் துணை‌ப் ‌பி‌ரி‌ந்து செ‌ல்வத‌ற்கான காரண‌ம்?
கூட்டுக் குடும்பம் உடைந்ததற்கு காரணம்? சமூகமா... கிரகங்களா?
எண் ஜோதிடப்படி பெயரை மா‌ற்‌றி வை‌த்து‌‌க் கொ‌ள்வதா‌‌ல் மா‌ற்ற‌ம் ‌நிகழுமா?
சிசேரியன் நேரம் காலம், பார்த்து செய்வது?