மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 33இல் சுரத்தால் கண்டம், கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சளியால், வயிற்று நோயால் தொந்தரவு, எந்தெந்த வயதில் கண்டம் என்று பொதுவாக சொல்லியிருப்பார்கள்.
பொதுவாக சொல்லியிருப்பதும் பலிக்கும். அவர்களுக்கு அந்த நேரத்தில் தசா புக்தி சரியாக இல்லாவிட்டால் அவை அப்படியே நடக்கும். எனவே நோய், விபத்து போன்றவற்றை நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம்.
இதனை கண்டுபிடித்து பரிகாரம் செய்து தடுத்து விடலாமா?
முன்னர் சொன்ன அந்த பேராசிரியரும், மனைவிக்கு புற்றுநோய் என்றதும் என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
அவரது மனைவிக்கு நெருப்புக் கிரகங்கள் பலவீனமாக உள்ளன. எனவே அக்னி தலத்திற்கு - இப்போது அக்னித் தலம் என்றதும் திருவண்ணாமலையைச் சொல்கிறார்கள். ஆனால் பொதுவாக அக்னித் தலம் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். சிதம்பரம் பெண்களுக்கு அக்னி மூலம்.
எனவே திருமூலரின் சமாதி இருக்கும் சிதம்பரத்திற்கு கூட்டிச் செல்லுங்கள். அர்த்த ஜாம பூஜையை பார்க்க வையுங்கள். மாதா மாதம் சிதம்பரம் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளேன்.
அவர்களது ஜாதகத்திற்கு, கிரக அமைப்பிற்கு சிதம்பரம் செல்வதுதான் பரிகாரம். இதுவே எல்லோருக்கும் பொருந்தாது.
பின்னாளில் வரக்கூடிய தசா புக்திகளுக்கும் சேர்த்து சிதம்பரம்தான் பரிகாரம். |