ஆனால் ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்நோய் தாக்கும். ஆனால் அப்போது சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிடுவார் என்றும் கூறினேன்.
விதை ஊன்றுகிறோம். அதற்கேற்ற சூழல் வரும்போது விதை முளைப்பது போல், பிறக்கும்போதே கர்ம வினைகளுக்கேற்ப நோய், விபத்து, ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது.
பிறந்த கிரக அமைப்புகள் பலவீனமாகும்போதும், நடைமுறை கிரக அமைப்புகள் பலவீனமாகும்போதும், குடும்பத்தில் தன்னைச் சார்ந்த உறவுகள், அதாவது கணவன், மனைவி, பிள்ளைகளின் கிரக அமைப்புகளும் பலவீனமடையும்போதும் அந்த காலக்கட்டத்தில் பெரிய நோய்க்கு ஆளாவார்கள்.
தனி மனித ஜாதகத்தில் இந்த கிரக அமைப்பில், ஏழரை சனி, அஷ்டமத்து சனி போன்றவை வரும், அப்போது கோச்சார கிரகங்களை வைத்து இந்த வயதில் இந்த நோய் வரும் என்று சொல்லிவிடலாம். எனவே முன்கூட்டியே எந்த காலக்கட்டத்தில் எந்தவிதமான நோய் வரும் என்று சொல்லிவிடலாம்.
உதாரணமாக தனுசு ராசிக்கெல்லாம் 8இல் செவ்வாய் இருக்கிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு பலன் எழுதும்போது 8இல் செவ்வாய் இருப்பதால் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும், கை, கால்களில் காயம் ஏற்படும் என்கிறோம்.
நமக்கு தெரிந்த ஒருவரிடம், கொஞ்ச நாட்களுக்கு அதாவது அடுத்த மாதம் 23ஆம் தேதி வரை பார்த்து கவனமாக இருங்கள். விபத்துகள் நேரிடும் என்று சொல்லியிருந்தேன். அவர்கள் ஊட்டிக்குப் போனார்கள். அங்கு விபத்து ஏற்பட்டு, மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனுசு ராசிக்கு தற்போது ஜென்ம குரு. 8இல் செவ்வாய் வரும்போது அடி, நூலிழையில் உயிர் தப்பித்துள்ளார். கோமா நிலைக்கு போய் ஒரு வாரம் கழித்து உணர்வு வந்துள்ளது. இதுபோல பெரிய நோய்கள், விபத்துகளை எல்லாம் முன்னரே கண்டறிந்து கொள்ளலாம்.
பழைய நூல்களில் அதாவது தீபிகை, கிரகச்சாரம், சுக்கிர நாடி போன்ற நூல்களில் லக்னப் பலன், ராசிப் பலன் என பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கும். |