முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > க‌ட்டுரைக‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
தூசுகள் என்றால் சிறிய கற்களா?

kethu
webdunia photoWD
நிக்கல் போன்றவைதான் ராகு, கேதுவில் உள்ளது. இரும்பு சனியிடம் இருக்கிறது என்றால் இரும்பு ஆக்சைடு, இரும்பு டை ஆக்சைடு போன்றவை ராகு, கேதுவில் உள்ளன. மேலும் எலுமிச்சைப் பழம் என்று எடுத்துக் கொண்டால் அதன் தோல் ராகு, கேதுவிடம் இருக்கிறது. சில நேரங்களில் சிலிகான் 90% இருக்கும். ஒரு சில நேரத்தில் 20% தான் இருக்கும். எனவே துகள்களின் தொகுப்பு என்பதால் இவை எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கும். மேலும் நீள்வட்டப் பாதை இல்லை. குறுக்கு நெடுக்காகச் செல்லும். அதனால் வேண்டுமானால் பாம்பாக உருவகம் செய்திருக்கலாம்.

வளைந்து, நெளிந்து போவதன் இயல்பைக் கொண்டு ராகு, கேதுவை பாம்பாகக் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

மேஷம் என்றால் ஆடு. இப்போ பிர்லா கோளரங்கத்தில் போய் பார்த்தால் மேஷ நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தால் அவை வடிவில் ஆடு போன்று காணப்படுகின்றன.

இவ்வளவு குணம் கொண்ட ராகு, கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராகு ஓஷோ போல, நல்லா அனுபவிக்கவிடுவார், பின்னர் எல்லாம் போன பிறகு என்னிடம் வருவாய் என்பது போல் விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும். ஆனால் கேது ரொம்ப கண்டிப்பானவர். எவ்வளவு பெரிய மாளிகையில் இருந்தாலும் கயிற்றுக் கட்டிலில்தான் படுப்பேன், பல வகையான உணவு இருந்தாலும் கஞ்சிதான் குடிப்பேன் என்பது போல் இருக்க வைப்பார்.

ராகுவுக்கும், கேதுவுக்கும் இருவேறு குணங்கள். ராகு எதுவாக இருந்தாலும் அனுபவிக்கணும். இந்த காலத்தில்தான் மது பானம் அருந்துதல், பிறர் மனை நோக்குதல் போன்றவை இருக்கும். வேலை செய்த கம்பெனியையே வாங்குவதும் இந்த காலத்தில்தான்.

நல்ல இடத்தில் எல்லாம் ராகு இருந்துவிட்டால் போதும் ராஜ யோகம்தான். வலிமையான ராகு நல்ல கிரகமாக அமைந்துவிட்டால் சுகபோக வாழ்க்கை, உயர்தர வாகனம் கிடைக்கும்.

கேது என்று பார்த்தால் அது பெரும்பாலும் கெடுதல் தான் செய்யும். குருவுடன், சுக்கிரனுடன், சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் மட்டும் தன்னுடைய தசையில் கெடுதலைக் குறைத்து நல்ல பலன்களை அளிக்கும்.

என்னுடைய அனுபவத்தில் இதுவரை இரண்டு பேருக்குத்தான் கேது நல்லது செய்துள்ளது. ஒருவர் பெரிய தொழிலதிபராக இருக்கிறார். மற்றொருவர் மிகப்பெரிய அரசியல் தலைவராக உள்ளார். இவர்கள் இருவர் மட்டுமே கேதுவின் பலன்களை அடைந்து வருகிறார்கள்.

அது எப்படி என்று பார்க்கும்போதுதான் மீன லக்னம், கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேது சேர்ந்தால் அவர்களுக்கு நல்லது செய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மீனத்திற்கும், கடகத்திற்கும் கேது ஒன்றும் செய்யாது. ஆனாலும், பதவி, புகழ் இருந்தாலும் அவர்களுக்கு நிம்மதியான தூக்கம், அமைதி இருக்காது. எனவே கொடுத்தும் கெடுப்பான் கேது என்பது உண்மை.

ராகு சுகபோகம் என்றால், கேது விரதம் மேற்கொள்வது, ஈரத் துணிக் கட்டிக் கொண்டு உண்ணாமல் இருப்பது போன்றவை செய்யும்.

ஜாதகம் பார்க்கும்போது ராகு, கேது இரண்டையும் பார்க்க வேண்டுமா?

ஆம். இரண்டையும் பார்க்க வேண்டும். ஒரு இரண்டரை வயதான குழந்தைக்கு தற்போது கேது தசை நடக்கிறது. அவரது அப்பா பெரிய தொழில் நடத்திவந்தார். பயங்கர கடனாகி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு தற்போது சென்னையில் தலைமறைவாக இருக்கிறார்.

இதுபோன்ற சமயங்களில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது, குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பது, அடிமைத் தொழில் செய்வது போன்றவை பரிகாரங்கள். இதை யாரும் கேட்பதில்லை. எப்படி என் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பேன் என்று கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு பின்னர் அவர்களது நேரமே அவர்களை குடும்பத்தில் இருந்து பிரித்துச் செல்லும். எனவே முதலிலேயே நல்லபடியாக பிரிந்து சென்றுவிடுவது நல்லது.

சிலருக்கு பார்த்தால் சூரியனோடு ராகு, சந்திரனோடு கேது இருக்கும். அவர்களுக்கு ஒரு சில ஆண்டுகள் நன்றாக இருக்கும். பின்னர் அப்படியே நிலைமை தலைகீழாகி பின்னர் சீராகும். திரும்பவும் கவிழ்த்துவிடும். இதுபோலவே அதன் ஓட்டத்திலேயே நம்மையும் எடுத்துச் செல்லும்.

இதனால்தான் சனிக்குப் பிறகு அதிகம் பயப்படுவது இந்த ராகுவிற்கும், கேதுவிற்கும்தான். ராகு, கேதுவைப் பொருத்தவரை கொஞ்சம் அவஸ்தைப் பட்டுத்தான் பலனை அனுபவிக்க முடியும்.

நல்ல வசதியாக இருக்கும்போதே இன்னும் கொஞ்சம் ஏதாவது செய்து லாபம் சம்பாதிக்கலாமா என்று எண்ணுவது ராகு, வறுமையில் இருந்தாலும் சிறுமைப்படாமல் வாழ வைப்பது கேதுவின் குணம்.

<< 1 | 2 | 3 | 4  >>  
மேலும்
இந்த ஆண்டு கோடைக்காலம் எ‌ப்படி? தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?
மாநிலங்களவைத் தேர்தல் எப்படி இருக்கும்?
மனநிலை மாற்றத்திற்குக் காரணம் என்ன?
தில்லை நடராஜர் கோயில் பிரச்சினை எதனால்?
தமிழ்நாடு : தேர்தல் கூட்டணியில் மாற்றம் ஏற்படும்!
பாகிஸ்தான் தேர்தல் ஜனநாயகத்திற்கு ஆதரவான முடிவு வந்திருப்பது?