1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 ஜூன் 2018 (19:46 IST)

தோண்ட தோண்ட தோட்டாக்கள்: ராமேஷ்வரத்தில் பரபரப்பு

ராமேஷ்வரத்தில் உள்ள ஒரு வீட்டில் செப்டிக் டேங்கை கட்ட குழி தோண்டிய போது பெட்டி பெட்டியாக பழைய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
ராமேஷ்வரத்தில் உள்ள அந்தோனியார் புரத்தை சேர்ந்தவர் மீன்வர் எடிசன், இவர் தனது வீட்டின் கழிவறைக்கு செப்டிக் டேங்கை கட்டுவதற்காக இன்று ஊழியர்களை அழைத்துள்ளார். 
 
அந்த ஊழியர்கள செப்டிக் டேங்க் கட்டுவதற்காக 5 அடி குழி தோண்டியுள்ளனர். அப்போது அந்த குழிக்குள் பெட்டி பெட்டியாக தூப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் பழைய தோட்டாக்கள் கிடைத்துள்ளது. இது குறித்து எடிசன் அங்குள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தோட்டாக்களை கைப்பற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.