ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (09:33 IST)

இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலைவாய்ப்பு!

praggnanandhaa
சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது
 
சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா தற்போது நடைபெற்று வரும் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் 
 
இந்த நிலையில் 16 வயதேயான இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலை வழங்கி உள்ளது. பணிக்கால அடிப்படையில் தனது பதினெட்டாவது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேருவார் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது