ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2021 (10:27 IST)

வருமானத்தை விட 1000 மடங்கு சொத்து: சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி!

வருமானத்தை விட 1000 மடங்கு சொத்து: சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி!
சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் என்ற அதிகாரி வருமானத்தை விட ஆயிரம் மடங்கு சொத்து சேர்த்த உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
தமிழக சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளராக பாண்டியன் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்ததை அடுத்து அதிரடியாக சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இவரது வீட்டில் சோதனை செய்தனர் 
 
அப்போது கோடிக்கணக்கில் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி லஞ்ச புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக ஆயிரம் மடங்கு சொத்துக்களை தனது மனைவி மற்றும் உறவினர் பெயரில் வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு அரசு அதிகாரி தன்னுடைய வருமானத்தை விட ஆயிரம் மடங்கு சொத்து சேர்க்க முடியுமா என்று பொதுமக்கள் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்