செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 ஜூன் 2018 (12:21 IST)

ஏண்டா இங்க குடிக்கிறீங்கன்னு கேட்ட காவலர் அடித்துக் கொலை

சென்னையில் காவலர் ஒருவர் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த  ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் வேலூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். 
 
இந்நிலையில் நேற்று பணி முடிந்து அவர் வீட்டிற்கு திரும்பிய போது, பள்ளி வாகனத்தில் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனால் மோகன்ராஜ் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த் அந்த போதை ஆசாமிகள், காவலரை மதுபாட்டில்களால் தலையில் தாக்கியுள்ளனர். மேலும் பாட்டிலை உடைத்து அவரது கழுத்தில் குத்தியுள்ளனர்.
 
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலே பலியானார். அவரை அந்த போதை ஆசாமிகள் ரோட்டில் வீசிச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோகன்ராஜை கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொல்லப்பட்ட மோகன்ராஜுக்கு அன்பு ரோஜா என்ற மனைவியும், அஸ்வின் என்ற மகனும், அவினாசி, அஜயா என்ற மகள்களும் உள்ளனர். மோகன்ராஜ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார்.