திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 மார்ச் 2022 (17:11 IST)

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய 167 நிறுவனங்களுக்கு சீல்!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தியதாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்த கடைகளுக்கு சீல் வைக்க தமிழக அரசு முடிவு செய்து அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு இதுவரை 36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது 
 
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடையை எதிர்த்து மறுஆய்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது