அதே நேரத்தில் யூலிப், பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறைந்த கால முதலீடாக இல்லாமல், நீண்ட கால முதலீடு என்ற நோக்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன. அத்துடன் இந்த நிதியை பங்குச் சந்தைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் நிர்வகிப்பதால், பாதிப்பு குறைவாக இருக்கின்றது.
யூலிப் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களும், மற்ற பரஸ்பர நிதியில் முதலீடு செய்துள்ளவர்களும் பங்குச் சந்தை குறித்த செய்திகளை தினசரி உன்னிப்பாக கவனிக்கின்றனர். பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் அதிகரிக்கும் போது எல்லை இல்லாத ஆனந்தம் அடையும் இவர்கள், அவை சரியும் போது மனமுடைந்து போகின்றனர். குறியீட்டு எண்கள் குறைவதால் எல்லா பங்குகளின் விலைகளும் சரிந்து விடுவதில்லை. அத்துடன் முதலீடு நிறுவனங்கள் சந்தை அபாயத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, பல்வேறுபட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்கின்றனர். இதனால் ஒன்றில் நஷ்டம் அடைந்தாலும், மற்றொன்றில் கிடைக்கும் இலாபத்தால் இழப்பு குறைகின்றது.
பங்குச் சந்தைகளில் சரிவு இருக்கும் நேரத்தில், பங்குச் சந்தையுடன் இணைந்த காப்பீடு திட்டத்தில், புதிதாக சேருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
இர்டா என்று அழைக்கப்படும் காப்பீடு ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளி விபரங்களின் படி டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனவரியில் யூலிப் திட்டத்தில் கட்டப்படும் தொகை அதிகரித்துள்ளது. இதில் டிசம்பர் மாதம் இறுதிவரை ரூ.8,880 கோடி முதலீடு திரட்டப்பட்டு இருந்தது. இது ஜனவரி மாதம் ரூ.9,551 கோடியாக அதிகரித்துள்ளது.
இதிலிருந்தே யூலிப் திட்டத்தில் முதலீடு செய்திருப்பவர்கள், பங்குச் சந்தையின் குறீயீட்டு எண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, வாய்ப்பு இருந்தும் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறவில்வலை. அத்துடன் இதில் புதிதாகவும் பல நூற்றுக்கணக்கான பேர் இணைந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.
|