இது அடுத்த வருட பட்ஜெட்டில் நீக்கப்படவில்லை. பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி தேவைப்படுவதாக கூறி, அப்படியே தொடர்ந்தது. அத்துடன் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமாக வருவாய் இருப்பவர்களுக்கு கூடுதல் வரி 10 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டது.
இந்த கூடுதல் வரிகள் எதாவது புது புது காரணகங்கள் கூறி வருடா வருடம் அப்படியே தொடர்கிறது. அது எந்த கட்சியைச் சேர்ந்தவர் நிதி அமைச்சராக வந்தாலும் கூட, கூடுதல் வரியை விதிப்பதிலும், தொடர்வதிலும் ஒற்றுமையாக ஒரே மாதிரியாகவே இருக்கின்றனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
இதை விட நிதி அமைச்சர்கள் வெளிப்படையாக நிரந்தரமாகவே வரியை உயர்த்திவிடலாம். நமது மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டு, கூடுதல் வரி, செஸ் என்ற போர்வையில் வரிச்சுமையை அதிகரிப்பதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வருடம் பிப்ரவரி 29 ந் தேதி நிதி அமைச்சப் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது, கூடுதல் வரி என்ற கூடுதல் சுமையை நீக்க வேண்டும்.
அரசு நேரடி வரி வருவாயை இழக்க விரும்பாவிட்டால் நேரடியாகவே வரிகளை உயர்த்தி விடலாம்.
எங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள்.
உங்கள் கருத்து பரிமாற்றம் மத்திய, மாநில அரசுகளை மக்களின் மன ஓட்டம், தேவைகள் பற்றி அறிய உதவியாக இருக்கும்.
இதில் தனிநபர்கள், வியாபாரிகள் சங்கம் போன்ற அமைப்புகள், குடும்ப நிதி அமைச்சர்களான பெண்கள், அவர்கள் அமைப்புக்கள், தொழில் அமைப்புக்கள், தொழிலாளர் சங்கங்கள் எல்லோரும் பங்கு கொள்ளலாம்.
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது:
கீழே அளிக்கப்பட்டுள்ள பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்,
அல்லது மின் அஞ்சல் வாயிலாக editor.tamil@webdunia.net அனுப்புங்கள்,
அல்லது இணைய தளத்தில் தட்டச்சு செய்ய முடியாதவர்கள் வெள்ளைத்தாளில் ஆங்கிலம் அல்லது தமிழில் உங்கள் கருத்துக்களை ஒரு பக்கம் மட்டும் எழுதி கீழ்கண்ட முகவரிக்கு தபால் அல்லது கூரியரில் அனுப்பலாம்:
The Editor - Tamil, Webdunia.com(India)pvt. Ltd., No:2, Kriba Sankari Street, West Mambalam, Chennai 600 033.
|