முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விவசாயிகளின் மேம்பாட்டிற்கு உதவும் வீடியோகா‌ன்பரன்சிங்!
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தரமான விதை, உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தேர்வு செய்வதற்கு உரிய ஆலோசனைகளைப் பெற வீடியோ கான்பரன்சிங் வசதியை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

மேலும் சந்தைப் பொருளாதாரம், சந்தையில் வேளாண் தொடர்பாக வரும் பொருட்கள் பற்றிய தகவல்களை இணையத்தின் வாயிலாக இயங்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

கிராம விவசாயக் குழுக்கள் பலவற்றை ஒருங்கிணைத்து செயல்பட இந்த வீடியோ கான்பரன்சிங் பெரிய அளவில் பயன்படுவதாக ராஜஸ்தான் மாநில வேளாண்மைத் துறை நிபுணர் மேத்தா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் வேளாண் குழுக்களை ஒருங்கிணைக்க இருவழி வீடியோ கான்பரன்சிங் வசதியை அம்மாநில அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இது விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட பெரிதும் உதவுவதாக மகாரானா பிரதாப் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் எஸ்.எல். மேத்தா தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ கான்பரன்சிங் வசதியை வேளாண் கல்வி முடித்த பயிற்சியாளர்கள், விவசாயிகள், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மீன் வளத்துறை மற்றும் வேளாண் எந்திரவியல் சார்ந்த அலுவலர்களின் தகுதியை மேம்படுத்த பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தேவையான கருத்துரைகள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களுடைய பிரச்சினைகளை கிராம விவசாய குழுத் தலைவரிடம் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினைகளுக்கு அக்கிராமங்களில் தீர்வு கிடைக்காத நிலையில் அவர்கள் உதய்பூருக்கு வரவேண்டிய நிலை முன்பு இருந்தது. தற்போது வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர்களுடைய பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட வேளாண் துறை வல்லுநர்கள் மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.

இந்த வசதியைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கிராமப்பகுதிகளில் வாழும் மாணவர்களின் வாழ்க்கைத் திறனை உயர்த்தும் வகையில் தையல் உள்ளிட்ட தொழில்களை சொல்லிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ கான்பரன்சிங் உதவியுடன் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதில் ஒருங்கிணைந்த கிராம விவசாயிகள் குழு மையம் உதவி செய்வதாகவும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை வாங்க விரும்புபவர்கள் இந்த மையத்தில் இருந்து சம்பந்தப்பட்ட விவசாயியுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் வியாபாரம் மேற்கொள்ள எளிதாகிறது.

இந்த முறையில் மேலும் பயனுள்ளதாக ஆக்க அதில் விவசாயிகளால் பயன்படுத்தப்படும் மொழியின் திறனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
  1 | 2  >> 
மேலும்
பெட்ரோல், டீசல் விலை உயர்த்த ஆலோசனை! தடுப்பாரா சோனியா?
எலிகளின் படையெடுப்பு : பட்டினியில் மக்கள்!
மிஜோரம் மாநிலத்தில் சுண்டெலி வால் இரண்டு ரூபாய்!
பங்குச் சந்தை : பார்டிசிப்பேட்டரி நோட் மிரட்டல்?
இந்தியாவில் கடன் நிதி நெருக்கடி ஆபத்து!
கிராம்பு விலை அதிகரிக்கும்!