முதன்மை பக்கம்  செய்திகள் > நிதி > கட்டுரைகள்
 
மிஜோரம் மாநிலத்தில் சுண்டெலி வால் இரண்டு ரூபாய்!
அஜ்வால் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு கிராமங்களில் 11,106 எலிகளின் வால் வாங்கப்பட்டுள்ளன. இதை காலையில் எரித்தோம். அதற்கு பிறகு வாங்கிய சுண்டெலி வால்களை அடுத்து எரிக்க போகின்றோம். இன்று காலையில் எரித்த சுண்டெலி வால்களில் பெரும்பான்மையானவை மிஜோரோமின் வடகிழக்கு பகுதியில் உள்ள ராடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கொண்டு வந்தது என்று அஜ்வால் மாவட்ட விவசாயத்துறை அதிகாரி லால்ஜரிலியான தெரிவித்தார்.

webdunia photoFILE
சுண்டெலி வாலுக்கு பரிசு என்ற திட்டம் மற்ற மாவட்டங்களிலும் சிறப்பாக வேலை செய்கிறது. லூங்கிலி மாவட்டத்தில் 30,600 சுண்டெலிகள் கொல்லப்பட்டு, அதன் வால் எரிக்கப்பட்டுள்ளன. இதில் கொலாசிப் கிராமத்தில் ஒரு வாலுக்கு 2 ரூபாய் பரிசு என்ற திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து வாங்கிய 10, 000 சுண்டெலி வால்களும் அடங்கும்.

செரிசிப் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 10,500 எலி வால்களையும், மமீட் மாவட்ட விவசாயிகள் 16,000 ஆயிரம் எலி வால்களையும் கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

இது மட்டுமில்லாமல் விஷம் கொடுத்து ஆயிரக்கணக்கான சுண்டெலிகள் கொல்லப்பட்டுள்ளன. இதன் வால்களை வெட்டி எடுக்காத காரணத்தினால் இவைகளின் எண்ணிக்கை தெரியவில்லை என்று விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுண்டெலி ஒழிப்புக்காக சிறப்பு படை அமைத்து எவ்வளவுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், அவை எஸ்கேப் ஆகி விடுகின்றன. சுண்டெலிகள் அதிகளவு பாதிப்பு உண்டாக்கி இருப்பதை விவசாயத் துறை அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர்.

மிஜோரம் மாநிலத்தி்ன் விவசாய துறை சுண்டெலி மற்றும் பூச்சிகளின் தாக்குதலினால் 70 முதல் 80 விழுக்காடு நெல் உற்பத்தி குறைந்துள்ளது. இதில் 80 விழுக்காடு சுண்டெலிகளாலும், 20 விழுக்காடு பூச்சிகளாலும் குறைந்துள்ளது என்று மதிப்பிட்டுள்ளது.

இந்த சுண்டெலிகள் நெல் பயிர்களை மட்டுமல்லாது கத்திரி, மிளகாய், சோயா மொச்சை, திராட்சை, மற்ற இனிப்பான பழங்கள், கரும்பு, வெண்டைக்காய், பூசனி ஆகியவற்றையும் ஆசை ஆசையாய் விரும்பு சாப்பிட்டுள்ளன. இதனால் இந்த பயிர்களும் சேதமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 << 1 | 2 | 3   
மேலும்
பங்குச் சந்தை : பார்டிசிப்பேட்டரி நோட் மிரட்டல்?
இந்தியாவில் கடன் நிதி நெருக்கடி ஆபத்து!
கிராம்பு விலை அதிகரிக்கும்!
ஏற்றுமதி, இறக்குமதியை பாதிக்கும் அரசின் முடிவு!
இயற்கை உரத்தால் விவசாயிகளின் வருவாய் உயர்வு!
மாம்பழ மகசூல் மகிழ்ச்சி கொடுக்க .....