முதன்மை பக்கம்  செய்திகள் > நிதி > கட்டுரைகள்
 
மிஜோரம் மாநிலத்தில் சுண்டெலி வால் இரண்டு ரூபாய்!
இதன் தாக்குதல்களை பற்றி மிஜோரம் மாநில விவசாய துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜ்வால் மாவட்டத்தில் 22 கிராமங்களில் சுண்டெலிகள் மற்றும் பூச்சிகளின் முதல் கட்ட தாக்குதலில் 945.90 ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் அழிந்து விட்டன. இதனால் 1,917 குடும்பங்கள் நஷ்டமடைந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுண்டெலி மற்றும் பூச்சிகள் நெற்பயிர்களை தாக்கியதால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலமே இருண்டு போயுள்ளது என்று கூறியுள்ளது.

webdunia photoFILE
அரசின் புள்ளி விவரப்படி, அஜ்வால் மாவட்டத்தில் 66 மாவட்டங்களில் நெற் பயிர்களில் 70 முதல் 80 விழுக்காடு வரை சுண்டெலிகள் அழித்து விட்டன. இதன் காரணமாக விவசாயிகள் அடுத்த பருவத்திற்கு விதைப்பு நெல் கூட இல்லாமல் பரிதவிக்கின்றனர். இவர்கள் அடுத்த பருவத்தில் விதைப்பதற்கு விதை தாணியங்களை அரசு வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுவரை சுண்டெலிகளின் தாக்குதலுக்கு 2,210 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிர்கள் அழிந்து போயுள்ளன. இதனால் 3,403 விவசாய குடும்பங்கள் நஷ்மடைந்துள்ளனர்.

வடக்கு லுங்பூர், கிபாங், சுவாலிங் ஆகிய கிராமங்களில் நெல் பயிர்களை சுண்டெலி மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேலி அமைத்தும், வலைகளை கட்டிநுள்ளதாகவும் விவசாய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வயல்வெளிகளை சுற்றி ஆங்காங்கே சுண்டெலிகளை பிடிக்க பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தினமும் பத்து எலிகளாவது உள்ளே புகுந்து சிறைபடுகின்றன.

மாநில விவசாய துறையில் உள்ள சுண்டெலி கட்டுப்பாட்டு குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுண்டெலிகளை கொன்று அதற்கு சாட்சியாக சுண்டெலியின் வாலை கொண்டு வருபவர்களுக்கு 1 வாலுக்கு ரூ.2 வழங்குவதாக தண்டோரா மூலம் அறிவித்தது.

இதற்கு நல்ல பலன் இருந்ததாக உதவி பயிர் பாதுகாப்பு அதிகாரி ஜேம்ஸ் லால்சியாமிலியான தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சுண்டெலிகளை கொன்று அதன் வாலை கொண்டு வருபவர்களுக்கு 2 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்த பின்பு விவசாயிகள் மத்தியில் சுண்டெலிகளை கொல்வதற்கு அதிக ஆர்வம் இருந்தது. தினசரி சுண்டெலியின் வால்கள் மலை போல் குவிந்தன என்று கூறினார்.

விவசாய துறை அதிகாரிகள் கூறுகையில், சுண்டெலிகளின் வால்களை செய்தியாளர்கள் முன்னிலையில் எரிப்பது அவசியம். ஏனெனில் இது ஒரே வாலிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை வாங்குவதை தவிர்க்க அவசியம்.
 << 1 | 2 | 3  >> 
மேலும்
பங்குச் சந்தை : பார்டிசிப்பேட்டரி நோட் மிரட்டல்?
இந்தியாவில் கடன் நிதி நெருக்கடி ஆபத்து!
கிராம்பு விலை அதிகரிக்கும்!
ஏற்றுமதி, இறக்குமதியை பாதிக்கும் அரசின் முடிவு!
இயற்கை உரத்தால் விவசாயிகளின் வருவாய் உயர்வு!
மாம்பழ மகசூல் மகிழ்ச்சி கொடுக்க .....